Home One Line P1 ஓவியங்கள் சீர்குலைப்பு: இரு பெண்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன

ஓவியங்கள் சீர்குலைப்பு: இரு பெண்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன

557
0
SHARE
Ad

ஷா அலாம்: கடந்த திங்கட்கிழமை (ஜூலை 23) தேசியத் தலைவர்களின் உருவப்படங்களின் பிரமாண்டமான சுவரோவியங்களில் விரும்பத்தகாத சொற்களை எழுதியதற்காக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களுடன் தொடர்புடைய பல தடயங்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் விளைவாக, இந்த வழக்கை விரைவில் தீர்க்க முடியும் என்று நம்புவதாக சிலாங்கூர் காவல் துறை துணைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட் தெரிவித்தார்.

“தற்போது நாங்கள் விசாரணையை மேற்கொண்டு வருவதால் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளோம் என்று சொல்ல முடியாது.

#TamilSchoolmychoice

“எங்களுக்கு சில இலக்குகள் உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் எங்களிடம் ஆதாரங்களும் உள்ளன. காவல் துறையினர் தங்கள் விசாரணையைத் தொடருவார்கள்” என்று அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவத்தில், நாட்டின் முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களின் பிரமாண்டமான சுவரோவியங்கள் மீது காழ்ப்புணர்ச்சி நடந்ததை அப்பகுதியில் உள்ள ஓர் உணவக ஊழியர் கவனித்தார். அவர் காலை 8 மணியளவில் அந்த இடத்தை கடந்து சென்ற போது இதனை உணர்ந்துள்ளார்.

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அவாங் ஹாடி ஆகியோரின் பிரமாண்டமான சுவரோவியங்கள் சிவப்பு வண்ணப்பூச்சு பயன்படுத்தி விரும்பத்தகாத சொற்களால் சீர்குலைக்கப்பட்டன.