Home One Line P2 “எஸ்.பி.பி. குணமடைகிறார்” மகன் சரண் கூறுகிறார்

“எஸ்.பி.பி. குணமடைகிறார்” மகன் சரண் கூறுகிறார்

814
0
SHARE
Ad

சென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மெல்ல மெல்ல மீட்சியடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இன்று  செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்தார்.

பாலசுப்பிரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது தந்தை தற்போது மயக்க நிலையில் இருந்து 90 விழுக்காடு மீண்டு விட்டதாகவும் வழங்கப்படும் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதாகவும் சரண் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் தனது தந்தையின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சரண் அண்மையில் காணொளி வழி நன்றி தெரிவித்துக் கொண்டார்.