Home One Line P1 வெவோனாவிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது

வெவோனாவிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது

463
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அரசாங்கம் சார்பாக வெவோனா மொசிபினிடம் மன்னிப்புக் கோரினார்.

சபாவில் மாணவியைச் சந்தித்த கைரி, வேவொனாவிடமும், அவரது பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“அவரிடமும் அவரின் பெற்றோரிடம் அரசாங்கத்தின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் இன்று பிற்பகல் டுவிட்டரில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னாள் அம்னோ இளைஞர் தலைவருமான அவர், 18 வயதான வேவொனா மலேசியப் புத்தாக்க அறக்கட்டளையுடன் இணைந்து தனது கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக புதுமை திட்டங்களுடன் அபிவிருத்தி செய்ய பரிந்துரைத்தார்.

அண்மையில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் சர்ச்சையாகப் பேசியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேவொனா மொசிபினுக்கு எதிராக இரண்டு துணை அமைச்சர்கள் கூறிய அவமானகரமான, நியாயமற்ற கருத்துக்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக கைரி ஜமாலுடின் நேற்று கூறியிருந்தார்.

மோசமான இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறித்து வேவொனா எழுப்பியுள்ள பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அறிவித்தார்.

“இன்று (நேற்று) காலை அமைச்சரவை வேவொனா பிரச்சனை பற்றி விவாதித்தது. இரண்டு துணை அமைச்சர்கள் வெளியிட்ட அவமதிப்பு,நியாயமற்ற அறிக்கைகளை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.

“உண்மையான பிரச்சனை இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு என்று அமைச்சரவை ஒப்புக்கொண்டது. அதை சரிசெய்ய அரசாங்கம் முடிந்தவரை முயற்சிக்கும், ” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் தனது கருத்துக்களுக்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் டத்தோ சாஹிடி ஜைனுல் அபிடின் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். வேவொனா கவனத்தை ஈர்ப்பவர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் மாதத்தில் இயங்கலையில் எந்தவொரு தேர்வும் நடத்தப்படவில்லை என்று தனது விசாரணையில் துணை நிதி அமைச்சர் அப்துல் ராகிம் தொடர்ந்து தற்காத்துப் பேசினார். மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளரை தனது ஆதாரமாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று, சபாவின் முன்னாள் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், சபா பல்கலைகழக (யுஎம்எஸ்) தலைவருமான டத்தோஸ்ரீ மாசிடி மஞ்சுன், ஜூன் மாதத்தில் வேவொனா தேர்வுகளுக்கு அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

ஜூன் மாதத்தில், வேவொனா தனது யூடியூப் அலைவரிசையில் ஒரு மரத்தின் மீது 24 மணிநேரம் எவ்வாறு செலவிட்டார் என்பதைக் காண்பிக்கும் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.