Home One Line P1 இரு முக்கிய சாட்சிகளை தனக்குத் தெரியாது என்ற ரோஸ்மா!

இரு முக்கிய சாட்சிகளை தனக்குத் தெரியாது என்ற ரோஸ்மா!

522
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் முக்கியமான நபர்களை தனக்குத் தெரியாது என்று ரோஸ்மா மன்சோர் கூறியுள்ளார்.

2018- ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பதிவு செய்த அறிக்கையின் ஒரு பகுதியில் இந்த மறுப்பு உள்ளது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ரோஸ்மா சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கின் விசாரணையின் போது இது வெளிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையின்படி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி, ஜெபாக் ஹோல்டிங்ஸின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் சம்சுடின் மற்றும் அவரது முன்னாள் வணிக பங்காளியான ராயான் ராட்ஸ்வில் அப்துல்லா ஆகியோரை தனக்குத் தெரியாது என்று கூறினார்.

இரண்டு நபர்களையும் தெரியுமா என்று எம்ஏசிசியின் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ரோஸ்மாவின் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடர்பான ஊழல் வழக்குகளில் சாட்சியமளித்த வழக்கின் விசாரணையில் சைடி மற்றும் ராயான் இரு முக்கிய நபர்கள் ஆவர்.

இந்த திட்டத்தைப் பற்றி தனக்கு என்ன தெரியும் என்று கேட்டபோது, ​​”சிக்கு அஸ்மி” என்று அழைக்கப்படும் தனிநபரை தனக்குத் தெரியாது என்று ரோஸ்மா கூறினார்.

முன்னதாக, “சிக்கு அஸ்மி” என்று அழைக்கப்படும் ஒரு நபர் பெக்கான் அம்னோ செயலாளர் அஸ்மி அபு தாலிபைக் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டது.

முன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்திர் காலிட் சாட்சியாக தனது சாட்சியத்தில் இந்த பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.