Home One Line P1 கிள்ளானில் துணை மாவட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு- வணிகங்கள் செயல்படலாம்

கிள்ளானில் துணை மாவட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு- வணிகங்கள் செயல்படலாம்

595
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளானில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவது துணை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், முழு கிள்ளான் மாவட்டத்திற்கும் பொருந்தாது என்று தற்காப்பு பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாளை முதல் கிள்ளானில் நடைமுறைக்கு வரும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் பல மாற்றங்களையும் அவர் அறிவித்தார்.

இரவு 10 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நள்ளிரவு தொடங்கி, இது கிள்ளான் மாவட்டத்தை மட்டுமே உள்ளடக்கியது என்றும் கிள்ளான் துறைமுக மற்றும் காபார் போன்ற பிற பகுதிகளை உள்ளடக்கியது அல்ல என்று அமைச்சர் கூறினார்.

“சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகியோரிடமிருந்து எனக்கு ஆலோசனை கிடைத்துள்ளது.

“நாங்கள் எப்போதும் மாநில அரசு மற்றும் சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்துடன் ஊராட்சி மன்றத்துடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நிபந்தனைக்களுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான பிற விஷயங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி கூறுகையில், கிள்ளான் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதாரத் துறைகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தியிருந்தாலும் இது அமலில் இருக்கும் என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“கிள்ளான் மாவட்டம் ஒரு பெரிய தொழில்துறை செயல்பாட்டு மையமாகும். இது மலேசியாவில் கொள்கலன் துறைமுகங்களுக்கான முக்கிய மையமாக உள்ளது.

“எனவே, கிள்ளான் மாவட்டத்தின் தற்போதைய சுகாதார நிலைமை மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இன்றைய சந்திப்பில், கிள்ளான் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதாரத் துறைகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடிவு செய்துள்ளது.”

“கிள்ளான் மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் இணக்கத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.