Home One Line P1 ‘பாஸ் இரு பக்கமும் ஆதரவு தெரிவிக்க முடியாது’!- நூர் ஜஸ்லான்

‘பாஸ் இரு பக்கமும் ஆதரவு தெரிவிக்க முடியாது’!- நூர் ஜஸ்லான்

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் இருப்பதா அல்லது அம்னோவுடன் முவாபாக்காட் நேஷனலுடன் இருப்பதா என்பதை பாஸ் தீர்மானிக்க வேண்டும் என்று டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறினார்.

பாஸ் சொந்த அரசியல் இலாபத்திற்காக இனி இரு தரப்பையும் ஆதரிக்க முடியாது என்று முன்னாள் துணை அமைச்சரான அவர்  கூறினார்.

செவ்வாயன்று, அம்னோ, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் தேசிய கூட்டணிக்கான ஆதரவை மறுஆய்வு செய்வதாக அறிவித்தது.

#TamilSchoolmychoice

“முவாபாக்காட் நேஷனல் மூலம் பாஸ் முதலில் அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்தியது, பின்னர் தேசிய கூட்டணியை ஆதரிப்பதில் மட்டுமே இணைந்தது.

“எனவே, அம்னோ இனி தேசிய கூட்டணியுடன் இருக்க விரும்பவில்லை என்றால், முவாபாக்காட் நேஷனலுடன் தொடரலாமா அல்லது தேசிய கூட்டணியைத் தொடர்ந்து ஆதரிக்கலாமா என்பது குறித்தும் பாஸ் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இது தெளிவாக இருக்கட்டும், ”என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான மாமன்னர் அங்கீகரித்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு மத்திய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பாஸ் வலியுறுத்தியது.

மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ​​மத்திய அரசியலமைப்பின் கீழ் மாமன்னர் தனது தனிச்சிறப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட்டார் என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறினார்.

“எனவே, தற்போது பிரதமராக மொகிதின் தலைமையிலான ஆட்சியை மாமன்னர் அங்கீகரித்ததை அனைத்து அரசியல் கட்சிகளும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று பாஸ் கேட்டுக்கொள்கிறது. அரசாங்கம் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

“தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, ஜிபிஎஸ், பாஸ் மற்றும் கபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை மக்கள் நலனில் முன்னுரிமை அளிப்பதன் மூலமும் கவனம் செலுத்துவதன் மூலமும் கூட்டாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.