Home One Line P1 சங்கப் பதிவாளர் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுகிறது!

சங்கப் பதிவாளர் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுகிறது!

418
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவாளர் தெர்ந்தெடுத்து பதிவுகளை அனுமதிப்பதால் பெஜுவாங் கட்சிப் பதிவு விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்று சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷைட் ரோஸ்லி கூறுகையில், பெஜுவாங் விண்ணப்பத்தை தேசிய கூட்டணியுடன் ஒப்பிட்டு, அக்கூட்டணி உடனடியாக செயலாக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

“மிகவும் சந்தேகத்திற்குரிய செயல்முறையில் உடனடி விகிதத்தில் சங்கப் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டணி பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகாரங்கள் வழங்கப்படுவதாக நான் உணர்கிறேன்.

#TamilSchoolmychoice

“உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அதிக உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கு அவர் தனது அமைச்சின் கீழ் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான பெர்சாத்து பிளவு கட்சியான பெஜுவாங் ஆகஸ்ட் மாதம் தங்கள் கட்சியை பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தனர்.

சபா மாநிலத் தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதே மாதத்தில் தேசிய கூட்டணி பதிவு செய்யப்பட்டு, கூட்டணி சின்னம் தொடங்கப்பட்டது.

பெஜுவாங்கின் விண்ணப்பம் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருவதாகவும், பதிவு செய்வதற்கான முழுமையான ஆவணங்களின் அவசியம் குறித்து பெஜுவாங்கிற்கு தகவல் அளித்துள்ளதாக சங்கப் பதிவாளர் நேற்று கூறியது.