Home One Line P1 பெஜுவாங் கட்சியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்

பெஜுவாங் கட்சியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்

442
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஸ்லீ மாலிக் பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் இனி சுயேச்சை  நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார்.

நேற்று கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தனது பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மஸ்லீ இந்த விஷயத்தை அறிவித்தார்.

“நான், சிம்பாங் ரெங்காமின் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக், பெஜுவாங் கட்சியின் உறுப்பினராக விலகுவதை இதன்மூலம் அறிவிக்கிறேன்.

#TamilSchoolmychoice

“கல்வித் துறையில் எனது பணியை ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் தேசிய பணிகள் மூலமாகவும் தொடருவேன்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, பெஜுவாங் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மஸ்லீயின் பெயர் இடம்பெறவில்லை.

இதற்கிடையில், மஸ்லீ தான் எடுத்த முடிவு மக்களின் தேவைகள் குறித்த ஆய்வுகள் மூலம் உண்மையைக் கண்டறிந்ததால் அமைந்தது என்று கூறினார்.

“உயரடுக்கு அரசியல்வாதிகளால் அதிகாரத்தின் அரசியலால் மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். மக்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சேவை செய்வதிலும் உண்மையில் தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்தும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.