Home One Line P1 மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டது!

மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டது!

427
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால அறிவிப்பு, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் பத்து சாபி இடைத்தேர்தல் வேற்ரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

“இந்த அவசர நிலை அறிவிப்பால் பத்து சாபியில் உள்ள மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாது.

“பத்து சாபியில் ஊரடங்கு உத்தரவு அல்லது இராணுவ பாணி விதி இல்லை.

#TamilSchoolmychoice

“சபா மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டு இருக்கும். அரசாங்க நிர்வாகம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடரலாம்,” என்று அவர் நேற்று சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

மத்திய அரசியலமைப்பின் 40- வது பிரிவின் பிரிவு (1) மற்றும் (1 ஏ) ஆகியவற்றுடன் சேர்ந்து 150- வது பிரிவின் கீழ் சபா பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னருக்கு அறிவுறுத்துவதற்கான அமைச்சரவை முடிவை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலை தொடர்ந்து சபாவில் கொவிட் -19 பரிமாற்றத்தின் தாக்கத்தை அமைச்சரவை கணக்கில் எடுத்துக்கொண்டதாக மொகிதின் கூறினார்.

வாக்குப்பதிவு நாளுக்கு 4 வாரங்களுக்குள் தொற்றுகள் அதிகமாக ஏற்பட்டபோது சபாவில் கொவிட் -19 பரிமாற்றத்தின் நிலைமை மோசமடைந்தது. அக்டோபர் 24 அன்று, சபா 11,285 ஒட்டுமொத்த சம்பவங்களைப் பதிவுசெய்தது. மலேசியாவில் 10,000- க்கும் மேற்பட்ட சம்பவங்க சம்பவங்களை பதிவு செய்த முதல் மாநிலமாக சபா ஆனது.

“இன்று, சபா இன்னும் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 ஒட்டுமொத்த சமப்வங்களை பதிவு செய்துள்ளது. 181 இறப்புகளுடன் 24,269 சம்பவங்கள் உள்ளன” என்று மொகிதின் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோய் முடிவடைந்ததும், பத்து சாபி இடைத்தேர்தல் உடனடியாக மத்திய அரசியலமைப்பில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று தேசிய கூட்டணி அரசாங்கம் உத்தரவாதம் அளிப்பதாக மொகிதின் கூறினார்.

இடைத்தேர்தல் நடைபெறும் போது, ​​வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலையில் பயன்படுத்த முடியும்” என்று அவர் விளக்கினார்.