Home One Line P1 கிரிக் நாடாளுமன்றத்தில் அவசரநிலை பிரகடனத்தை வரவேற்கிறேன்!

கிரிக் நாடாளுமன்றத்தில் அவசரநிலை பிரகடனத்தை வரவேற்கிறேன்!

440
0
SHARE
Ad

ஈப்போ: மாநிலத்தின் கொவிட் -19 நிலைமை மோசமடைந்துவிட்டால், கிரிக் இடைத்தேர்தலை தாமதப்படுத்த அவசரகால பிரகடனமும் தேவைப்படலாம் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு கூறினார்.

டிசம்பர் 5- ஆம் தேதி நடக்க இருந்த வாக்கெடுப்பை, சட்டப்பூர்வமாக ஒத்திவைக்க பத்து சாபியில் அவசரகால பிரகடனம் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிரிக் இடைத்தேர்தலுக்கு இன்னும் தேதிகள் நிர்ணயிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

“நாங்கள் இப்போது கவலைப்படுவது கொவிட் -19 க்கு எதிரான போராட்டம்.

“அரசியலுக்கு இப்போது முன்னுரிமை இல்லை என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன், ஆனால் நாங்கள் ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை முதலில் அறிவிக்க அனுமதிப்பது புத்திசாலித்தனம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெர்சாத்து, அம்னோ மற்றும் பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கும் என்றும், அகமட் பைசால் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் வேட்பாளர் தேசிய கூட்டணியிலிருந்து வருவார் என்றும் அவர் கூறினார்.

நேற்று, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின், பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதிக்கு அவசரகால பிரகடனத்தை வெளியிட்டார்.

கொவிட் -19 பாதிப்பின் நான்காவது அலைகளைத் தவிர்ப்பதற்கான இந்த முடிவை மாமன்னர் எடுத்துள்ளதாகவும், இடைத்தேர்தலுக்கு, பின்னர் மற்றொரு தேதி அறிவிக்கப்டும் என்றும் அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய பிரதமர், பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால அறிவிப்பு, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே என்று தெரிவித்திருந்தார்.

“இந்த அவசர நிலை அறிவிப்பால் பத்து சாபியில் உள்ள மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாது.

“பத்து சாபியில் ஊரடங்கு உத்தரவு அல்லது இராணுவ பாணி விதி இல்லை.

“சபா மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டு இருக்கும். அரசாங்க நிர்வாகம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடரலாம்,” என்று அவர் நேற்று சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

மத்திய அரசியலமைப்பின் 40- வது பிரிவின் பிரிவு (1) மற்றும் (1 ஏ) ஆகியவற்றுடன் சேர்ந்து 150- வது பிரிவின் கீழ் சபா பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னருக்கு அறிவுறுத்துவதற்கான அமைச்சரவை முடிவை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலை தொடர்ந்து சபாவில் கொவிட் -19 பரிமாற்றத்தின் தாக்கத்தை அமைச்சரவை கணக்கில் எடுத்துக்கொண்டதாக மொகிதின் கூறினார்.

தேர்தல் உடனடியாக மத்திய அரசியலமைப்பில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று தேசிய கூட்டணி அரசாங்கம் உத்தரவாதம் அளிப்பதாக மொகிதின் கூறினார்.

இடைத்தேர்தல் நடைபெறும் போது, ​​வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலையில் பயன்படுத்த முடியும்” என்று அவர் விளக்கினார்.