Home One Line P1 லாரி சங்கின் பதவி விலகலை சரவாக் பிகேஆர் நிராகரித்தது

லாரி சங்கின் பதவி விலகலை சரவாக் பிகேஆர் நிராகரித்தது

385
0
SHARE
Ad

கூச்சிங்: கட்சியின் உயர் பதவியில் இருந்து பதவி விலகுவதாகக் கூறிய லாரி சங் எடுத்த முடிவை சரவாக் பிகேஆர் மாநில தலைமை மன்றம் ஏகமனதாக நிராகரித்தது.

அடுத்த கட்சி தேர்தல் வரை மாநில தலைமை மன்றம் லாரிக்கு முழு ஆதரவையும் அளிக்கும் என்று சரவாக் பிகேஆர் தகவல் தலைவர் அபுன் சூய் அனிட் நேற்றிரவு அவசர கூட்டத்தை நடத்திய பின்னர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“எனவே, சரவாக் முழுவதும் உள்ள பிகேஆர் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும். உயர் கட்சித் தலைவர்கள் முதல் கிளை வரை அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு கிளை மற்றும் தொகுதியிலும் உள்ள மக்களின் தலைவிதியை எதிர்த்துப் போராடுவதிலும் பாதுகாப்பதிலும் தொடர்ச்சியான முயற்சிகளில் தொடர்ந்து ஒன்றிணைந்து கவனம் செலுத்துமாறு சரவாக் பிகேஆர், கிளைகளையும் உறுப்பினர்களையும் அழைக்கிறது,” என்று அவர் முகநூல் வழியாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று, சமூக ஊடகங்கள் மூலம் லாரி சரவாக் பிகேஆர் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

“ஆழ்ந்த பரிசீலனைகளுக்குப் பிறகு, பிகேஆர் சரவாக்கின் நலன்களுக்காக, சரவாக் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் இந்த கட்சியை டாயாக் தலைவர்கள் வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். சரவாக் மக்கள்தொகையில் உள்ள டாயாக்களில் பெரும்பான்மையானவர்கள், 43 விழுக்காடு மக்களைக் குறிக்கின்றனர். மலாய்க்காரர்களும் சீனர்களும் 24 விழுக்காட்டினர் மட்டுமே. இருப்பினும், சரவாக்கில் மிகவும் வறிய மற்றும் பின்தங்கிய பகுதிகளில் டாயாக் மக்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று லாரி இன்று தெரிவித்துள்ளார்.

2001- ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் சரவாக் டாயாக் கட்சியின் (பிபிடிபி) கீழ் லாரி முதன்முதலில் போட்டியிட்டார்.