Home One Line P1 அனுவார் மூசா பதவி நீக்கம் தேமு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசவில்லை

அனுவார் மூசா பதவி நீக்கம் தேமு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசவில்லை

380
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசா பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை அல்லது தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவால் முடிவு செய்யப்படவில்லை என்று மசீச தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் அவர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும், அதன் செல்லுபடியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் மசீச கூறியுள்ளது.

“மசீச கட்சியின் கருத்துப்படி, தேசிய முன்னணியில் ஒரு பதவிக்கு நியமனம் செய்யப்பட வேண்டுமெனில், அது தேசிய முன்னணி அரசியலமைப்பின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். வழக்கமாக இந்த நியமனத்தை தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து முன்வைத்து ஒப்புக் கொள்ள வேண்டும்,” என்று மசீச கூறியது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் குறித்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும், எனவே இந்த நேரத்தில் மேலதிக கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் மசீச தெரிவித்துள்ளது.

முன்னதாக, தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசாவை அக்கூட்டணி நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

“அவர் முவாபாக்காட் நேஷனல் செயலகத்தில் அம்னோவின் பிரதிநிதியாகவும் நீக்கப்பட்டார்,” என்று தெரிவிக்கப்பட்டது.

தேசிய கூட்டணி, பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கு சாதகமாக பேசி வந்ததை அடுத்து அனுவார் மூசா அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தினார். மேலும், தம்மை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமானால் நீக்கட்டும் என்று அவர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

மலாய் கட்சிகள் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கங்களிடையே ஒத்துழைப்பைப் பேணுவதற்காக அவர் விலக தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

அனுவாருக்கு பதிலாக தேசிய முன்னணி பொதுச்செயலாளராக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் நியமிக்கப்படுவார்.