Home One Line P1 பிபிஎன் 2.0 நிதி உதவி விரைவுப்படுத்தப்படும்

பிபிஎன் 2.0 நிதி உதவி விரைவுப்படுத்தப்படும்

769
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனவரி 21 தொடங்கி 11.06 மில்லியன் பெறுநர்களுக்கு, 2.38 பில்லியன் ரிங்கிட் பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்2.0) நிதி உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 11- ஆம் தேதி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை  அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

இன்று ஓர் அறிக்கையில், பிபிஎன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://bpn.hasil.gov.my- இல் ஜனவரி 15 முதல் விண்ணப்பத்தை சரிப்பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“பி40 மற்றும் எம்40 பெறுநர்களுக்கான கொடுப்பனவுகள் முறையே ஜனவரி 21 மற்றும் ஜனவரி 25 முதல் தங்கள் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும். வங்கி கணக்கு இல்லாத பெறுநர்களுக்கு, பணம் செலுத்தும் தேதி ஜனவரி 25-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேங்க் சிம்பானான் நேஷனல் (பிஎஸ்என்) கிளைகளில் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.