Home One Line P1 தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்காததை அரசியல் விவகாரமாக்க வேண்டாம்!

தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்காததை அரசியல் விவகாரமாக்க வேண்டாம்!

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா இரத்தானதை அடுத்து, பொது விடுமுறை இல்லை என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு எடுத்த முடிவு, மாநிலத்தில் இந்துக்களின் உரிமைகளை மறுக்கவில்லை.

கொவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதன் மூலம் மக்கள் எங்கும் திருவிழாவைக் கொண்டாட முடியும் என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.

“எல்லோரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் விடுமுறையில் இருக்கிறார்கள். இதுவரை, கெடா தைப்பூசத்திற்கு விடுப்பு வழங்கியதில்லை. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான பொது விடுமுறை கெடாவில் இல்லை. கெடாவின் முடிவு, மாநிலத்தில் உள்ள யாருடைய உரிமைகளையும் ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கெடாவில் தைப்பூசத்திற்கு நிகழ்வு விடுமுறை இல்லை என்றாலும், அது இன்னமும் கெடாவில் சுதந்திரமாகவும் கமகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது, ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொடர்பான தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு கெடாவில் விடுப்பு இல்லை என்று நேற்று முகமட் சனுசி தெரிவித்திருந்தார்.

இந்த முடிவைத் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள், குறிப்பாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி சாடியிருந்தனர்.

இந்த பிரச்சனை அரசியல் மூலதனமாக பயன்படுத்தப்படக்கூடாது, ஏனெனில் நாடு இப்போது ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது என்ரு சனுசி மேலும் கூறினார்.