Home One Line P1 ஐ- சினார்: பிரிவு 2-க்கு விண்ணப்பத்தை எளிமைப்படுத்த வேண்டும்

ஐ- சினார்: பிரிவு 2-க்கு விண்ணப்பத்தை எளிமைப்படுத்த வேண்டும்

473
0
SHARE
Ad
KUALA LUMPUR 09 JULAI 2018. Ketua Pergerakan Pemuda UMNO Malaysia, Datuk Dr Asyraf Wajdi Dusuki mengadakan sidang media selepas mempengerusikan Mesyuarat Exco Pergerakan Pemuda UMNO Malaysia di Menara Dato Onn, Kuala Lumpur. NSTP/AIZUDDIN SAAD

கோலாலம்பூர்: ஐ- சினார் விண்ணப்பத்தை எளிமைப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவு ஊழியர் சேமநிதி வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக பிரிவு 2 விண்ணப்பதாரர்களுக்கு அது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஈபிஎப் எதிர்நோக்கும் தொழில்நுட்ப சிக்கல்களால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அதன் இளைஞர் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டி டுசுகி கூறினார்.

“அம்னோ இளைஞர் பிரிவு மீண்டும் ஐ-சினார் விண்ணப்பத்தை இலகுவாக்க ஈபிஎப்-ஐ கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக பிரிவு 2 -இன் அனைத்து நிபந்தனைகளையும் இரத்து செய்வதன் மூலம் மக்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக திரும்பப் பெற முடியும்,” என்று அவர் தனது முகநூல் ஒரு பதிவில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நேற்று நள்ளிரவில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் ஓர் அறிக்கையில் , ஐ-சினார் வசதி தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஈபிஎப் தெரிவித்தது.

ஐ-சினார் பிரிவு 2 விண்ணப்பங்களில் பெரும்பாலானவை நேற்று தொடங்கி மறுஆய்வு செய்த பின்னர், அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியானது.