Home One Line P1 அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது மஸ்லீ மாலிக் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது மஸ்லீ மாலிக் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்

433
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் படிவம் 4 வரலாறு பாடப்புத்தகத்தில் மேற்கோள்கள் மூலம் கம்யூனிஸ்டுகளை மகிமைப்படுத்தியதாகக் கூறியதற்காக அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி மீது வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.

நாடு அப்போது, அம்னோவின் கீழ் இருந்தபோது, ​​ஏப்ரல் 2018- இல் இப்பாடப்புத்தகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன என்று கல்வி அமைச்சகம் நேற்று விளக்கமளித்ததை அடுத்து, மஸ்லீ, அசிராப் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரினார். .

“நான் எனது வழக்கறிஞரிடமிருந்து ஆலோசனையைப் பெற்றுள்ளேன், மேலும் அவதூறு அறிக்கை குறித்து அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டிக்கு கோரிக்கை கடிதம் அனுப்புமாறு எனது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” என்று அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பல்வேறு சிறப்பு மற்றும் இனங்களைச் சேர்ந்த ஏழு வரலாற்றாசிரியர்களைக் கொண்ட கல்வி அமைச்சு வரலாற்று பாடத்திட்டம் மற்றும் வரலாறு பாடநூல் குழுவால் பாடநூல் ஆராயப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்பட்டது என்று கல்வி அமைச்சு கூறியது.

வரலாற்று புத்தகங்கள் கம்யூனிஸ்டுகளை மகிமைப்படுத்துவதாகவும், அவற்றை சரிசெய்யும்படி கேட்டுக்கொள்வதாகவும் அம்னோ இளைஞர் பிரிவு கூறியிருந்தது.

இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இத்தகைய அரசியல் கலாச்சாரத்தால் மலேசியர்கள் சோர்வடைந்துள்ளதாக மஸ்லீ இன்று தெரிவித்தார்.

“இந்த தீய கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது மக்களுக்கு சிறிதும் பயனளிக்காது. அரசியல்வாதிகள் இப்போது மக்களுக்கு உதவுவதிலும், சேவைக்கான அரசியல் கலாச்சாரத்தைத் தொடங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். எந்த கட்சியாக இருந்தாலும், இனவெறி அவதூறு கலாச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.