Home One Line P1 நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில எல்லையைக் கடக்க அரசு அனுமதி

நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில எல்லையைக் கடக்க அரசு அனுமதி

457
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களுக்குள் உள்நாட்டு சுற்றுலா இயக்கத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவது உட்பட கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இந்த கட்டுப்பாடுகளுக்குள் உள்ள மாநிலங்களுக்குள் சுற்றுலாவை அனுமதிக்க இன்று கூட்டம் ஒப்புக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

“ஆனால், சுற்றுலா அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தனி வாகனஙக்ளுக்கு அனுமதி கிடையாது என்றும் அவர் கூறினார்.

மலாக்கா, பகாங், திரெங்கானு, சபா, புத்ராஜெயா, லாபுவான் மற்றும் பெர்லிஸ் ஆகியவை இந்த உத்தரவின் கீழ் உள்ளன.