Home One Line P1 பாரம் தூக்கி விழுந்ததில் இருவர் மரணம்

பாரம் தூக்கி விழுந்ததில் இருவர் மரணம்

593
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நெடுஞ்சாலை கட்டுமானத் தளத்தில் பாரம் தூக்கி கவிழ்ந்ததில் இருவர் மரணம். மேலும், ஒரு கார் இதில் நசுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம் தூக்கியிலிருந்து இருந்து எஃகு, வாகனத்தை நசுக்கியதால் கார் ஓட்டுனர் பலத்த காயமடைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.

சுமார் 36.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த இரு தொழிலாளர்களும் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. மற்றொரு தொழிலாளியை விடுவிக்க மீட்புப் பணியாளர்கள் இன்னும் முயற்சித்து வருவதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெர்சியாரான் ஆலாம் டாமாய், புஞ்சாக் பன்யான் அருகே காலை 8.45 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், 26 நபர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் அது கூறியுள்ளது.