Home One Line P1 அம்னோ தேர்தலை ஒத்திவைக்கலாம்!- சப்ரி யாகோப்

அம்னோ தேர்தலை ஒத்திவைக்கலாம்!- சப்ரி யாகோப்

606
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றம் இந்த ஆண்டு கட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யலாம் அல்லது ஒத்திவைக்கலாம் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

கட்சி அரசியலமைப்பின் படி, கட்சித் தலைமையின் நிறைவு காலம் முடிந்ததும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அம்னோ தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

“அம்னோ அரசியலமைப்பின் படி, 18 மாதங்களுக்கு கட்சித் தேர்தலை ஒத்திவைக்க உச்சமன்றத்திற்கு உரிமை உண்டு. தற்போதைய அம்னோ தலைமைக்கான நிறைவு காலம் ஜூன் 30 ஆகும். ஆனால் தேர்தலை ஒத்திவைக்க விரும்பினால், அது உச்சமன்றத்தின் முடிவு, ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அம்னோ தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலை ஒத்திவைக்க ஒரு தரப்பும், 15- வது பொதுத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும் குறிப்பிட்டு வருகின்றனர்.