Home One Line P2 ப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்

ப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்

665
0
SHARE
Ad
படம்: டி ரோயல் பெமிளி டுவிட்டர் பக்கம்

இலண்டன்: பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) தனது 99-வது வயதில் காலமானதை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து பல தலைவர்களும், பிரமுகர்களும் இளவரசர் பிலிப்ஸ் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், அவரது இறுதி சடங்குகள் பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. இறுதி சடங்கு பற்றிய தகவல் உடனே தெரிவிக்கப்படாவிட்டாலும், அரச குடும்பத்தை பொறுத்தவரை முக்கியமான ஒருவர் காலமாகி விட்டால் அவரது இறுதி சடங்கை எப்படி நடத்துவது என்பது முன்னரே திட்டமிடப்பட்டுவிடும்.

பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால்  வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்தான் (Westminster Hall) உடலை  வைப்பார்கள். ஆனால், அங்கு தனது உடலை வைக்க வேண்டாம் என்று பிலிப் ஏற்கனவே கூறிவிட்டார்.

#TamilSchoolmychoice

தனது மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, வின்ட்ஸர் காசல் (Windsor Castle) அரச மாளிகையின் ப்ரோக்மோர் (Frogmore) தோட்டத்தில் இளவரசர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.