Home One Line P1 சாஹிட்- அன்வார் குரல் பதிவு உண்மை என்று சந்தேகிக்கப்படுகிறது!

சாஹிட்- அன்வார் குரல் பதிவு உண்மை என்று சந்தேகிக்கப்படுகிறது!

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடலின் குரல் பதிவு இரு கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் உண்மை என சந்தேகிக்கப்படுவதை நிரூபித்துள்ளதாக பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.

குரல் பதிவு குறித்த வெளிப்பாடு பெஜுவாங்கை பெரிதும் ஏமாற்றமடையச் செய்தது என்று அவர் கூறினார்.

“இதற்கு முன், நம்பிக்கை கூட்டணிக்கு, குறிப்பாக பிகேஆர் மற்றும் அம்னோவுக்கு, நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுடன், எதாவது ஒத்துழைப்பு இருந்தால் அதை வெளிப்படுத்த பெஜுவாங் பலமுறை கேட்டுள்ளோம். நாங்கள் ஒருபோதும் பதில் பெறவில்லை. ஆனால், இந்த குரல் பதிவு வெளிவந்தபோது, ​​நாங்கள் முன்பு சந்தேகித்தவை உண்மை என்று நிரூபிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

“நாங்கள் எப்போதும் குறிப்பிடும் நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் எந்தவொரு தரப்பினருக்கும், எவ்விதமான ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பதை நான் சந்தேகிக்கிறேன்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்.

அண்மையில், இந்த குரல் பதிவு குறித்து இரு தலைவர்களும் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.