Home One Line P1 நாடாளுமன்றம், சட்டமன்றம் மீண்டும் தொடரப்பட வேண்டும்- அம்னோ

நாடாளுமன்றம், சட்டமன்றம் மீண்டும் தொடரப்பட வேண்டும்- அம்னோ

550
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கூட வேண்டும் என்றும், அதற்கான இடைநீக்கத்தை நீக்குமாறும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்த அம்னோ ஒப்புக் கொண்டது.

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இதற்கான அழைப்பு விடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த முடிவு நேற்று எடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தையும் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் மீண்டும் கூட்ட அனுமதிக்க அரசாங்கத்தை வலியுறுத்த கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் கூறினார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றம் அவசரகால சூழ்நிலையில் அமரக்கூடும் என்ற மாமன்னரின் உத்தரவுக்கு இணங்க இது இருப்பதாக அவர் கூறினார்.

“நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நடைமுறையை அரசாங்கம் தடை முயற்சிப்பதைக் காண முடியாது.

“நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவை மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து பேசும் களமாகும். இதனால் பொருளாதாரம், வேலையின்மை, வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ளும் மக்களின் நலன்களையும் புறக்கணிக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் போகலாம். மேலும், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்,” என்று அகமட் மஸ்லான் கூறினார்.