Home நாடு கோலாலம்பூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையே பொருத்தமானது

கோலாலம்பூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையே பொருத்தமானது

714
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ள இந்த நேரத்தில் கோலாலம்பூருக்கு பொருத்தமான அணுகுமுறை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

பல மாநிலங்கள் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மக்கள் வாழ்க்கையின் சமநிலையின் முக்கியத்துவத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த விண்ணப்பத்தை ஆழமாக ஆய்வு செய்ய தேசிய பாதுகாப்பு மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அனுவார் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது மிகவும் கடினமான சூழ்நிலை. தேசிய பாதுகாப்பு மன்ற கொவிட் -19 குழுவின் உறுப்பினராக நான் ஒவ்வொரு நாளும் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது நிபுணர்களின் குழுக்களின் ஆலோசனையை சந்தித்து கேட்கிறேன்.

“கொவிட் -19 ஐ நிர்வகிக்க ஒரு நிலையான சூத்திரம் அல்லது குறிப்பிட்ட சிறந்த வழி இல்லை, ஏனெனில் இது மிகவும் தனித்துவமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் , வேறு முறையைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.