Home நாடு அவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்

அவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்

518
0
SHARE
Ad

கோத்தா பாரு: கிளந்தானில் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில், அவசரம் இல்லாவிட்டால் மாநில எல்லைகளைக் கடக்க வேண்டாம் என்று சுல்தான் முகமட் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவங்களின் அதிகரிப்பு மற்றும் தென்னாப்பிரிக்க பிறழ்வான பி: 1: 351 பரவல் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

சுல்தான் முகமட்டின் மூத்த அந்தரங்கச் செயலாளர், நிக் முகமட் ஷாப்ரிமன் நிக் ஹசான் கூறுகையில், தேசிய பாதுகாப்பு மன்றம் அமைத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பல கிளந்தான் மக்கள் இன்னும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதைக் கண்டு வருத்தப்படுவதாகக் கூறினார். அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“தீவிர சிகிச்சை பிரிவில் கிட்டத்தட்ட இடமில்லாமலும், தற்போதுள்ள அங்குள்ள நோயாளிகளையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் வழக்கமான வார்டுகளில் வைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நிறைய தியாகம் செய்த சுகாதார அமைச்சகத்தின் ஊழியர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மக்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று சுல்தான் முகமட் நம்புவதாக அவர் கூறினார்.