Home நாடு 800,000 அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு பங்களிப்பர்

800,000 அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு பங்களிப்பர்

399
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு ஒரு நிலையான தொகையை வழங்குவார்கள் என்று தேசிய தலைமைச் செயலாளர் முகமட் சுகி அலி தெரிவித்தார்.

ஏறக்குறைய அனைத்து தரநிலைகளிலிருந்தும் சுமார் 800,000 அரசு ஊழியர்கள் தங்கள் நிலையான பொழுதுபோக்கு கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் இதில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

“பங்களிப்பு சுமார் 30 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஏ தரநிலையின் கீழ் உள்ளவர்கள் தங்கள் கொடுப்பனவுகளில் 50 விழுக்காடு பங்களிப்பார்கள். பி தரநிலை மற்றும் சி தரநிலை கீழ் உள்ளவர்கள் முறையே 20 மற்றும் 1 விழுக்காடுகள் பங்களிப்பார்கள்.

இந்த விலக்குகள் மூன்று மாதங்களுக்கு இருக்கும் என்று சுகி கூறினார்.