Home உலகம் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதுமாக வெளியேறியது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதுமாக வெளியேறியது அமெரிக்கா

771
0
SHARE
Ad

காபூல் : நேற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறது. கடந்த சில நாட்களில் சுமார் 120 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களையும் அமெரிக்காவுக்கு ஆதரவான ஆப்கானிஸ்தான் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றிருக்கிறது அமெரிக்கா.

கடந்த 20 ஆண்டுகளாக அங்கு அமெரிக்க இராணுவம் செயல்பட்டு வந்தது. அமெரிக்கா வெளியேற்றத்தைத் தொடர்ந்து தற்போது இருபதே நாட்களில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருக்கிறது தாலிபான் இயக்கம்.

இதற்கிடையில் அமெரிக்காவின் கடைசி இராணுவ வீரர் காபூலில் இருந்து புறப்பட்ட பின்னர் தாலிபான்கள் அந்த நிகழ்வைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகள் எழுப்பப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆங்காங்கே வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.

அமெரிக்கர்கள் விட்டுச் சென்ற இராணுவத் தளவாடங்களை தாலிபான்கள் கைப்பற்றி அவற்றைப் பயன்படுத்திக் காட்டினர். அமெரிக்க இராணுவ ஹெலிகோப்டர் ஒன்றையும் தாலிபான்கள் இயக்கிக் காட்டினர்.

இனி தாலிபான் அரசாங்கத்துடன் எத்தகைய தூதரக அளவிலான தொடர்புகள் ஏற்படுத்தப்படும் என்பது பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முடிவு செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

மலேசியர்கள் நிலைமை என்ன?

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவில் போராளிகளாக பங்கேற்ற இரண்டு மலேசியர்களை தாலிபான் அரசாங்கம் சிறைப்பிடித்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியானது.

எனினும் அவர்களின் நிலைமை என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal