Home நாடு பிகேஆர்: கூட்டரசுப் பிரதேசத் தலைவர் ரபிசி – சிலாங்கூருக்கு அமிருடின்

பிகேஆர்: கூட்டரசுப் பிரதேசத் தலைவர் ரபிசி – சிலாங்கூருக்கு அமிருடின்

572
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

கோலாலம்பூர் : பொதுத் தேர்தலை நோக்கி எல்லா அரசியல் கட்சிகளுன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பிகேஆர் கட்சியின் தேர்தல்கள் முடிவடைந்து தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபிசி ரம்லி கூட்டரசுப் பிரதேச தொடர்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவராக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நியமனங்களை கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச மாநிலங்களின் பிகேஆர் தொகுதித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அன்வார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice