Home உலகம் கோத்தாபாயாவுக்கு தாய்லாந்து அனுமதி

கோத்தாபாயாவுக்கு தாய்லாந்து அனுமதி

399
0
SHARE
Ad

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்சவை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாய்லாந்து கோரிக்கையைப் பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டானி சங்ராட் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார்.

ராஜபக்ச வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்தார். பொருளாதார சரிவைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடந்த மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு மாலைத் தீவுகளின் வழியாக சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்.

தாய்லாந்து இலங்கையுடனான உறவின் அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலித்துள்ளதாக டானி கூறினார். ராஜபக்சவின் இந்த நடவடிக்கை தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

“இலங்கையின் முன்னாள் அதிபர் தாய்லாந்தில் நிரந்தரமாக தங்குமிடம் தேட விரும்பவில்லை, விரைவில் அவர் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்” என்று இலங்கை அரசாங்கத்தை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்துவ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஜூலை மாதம் ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை 14 அன்று மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற ராஜபக்ச தென்கிழக்கு ஆசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இரண்டாவது நாடு தாய்லாந்து ஆகும்.