Home நாடு 15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் – பிரதமர் சூசகம்

15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் – பிரதமர் சூசகம்

352
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் இனி எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கூறியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் தித்திவாங்சா அரங்கத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி இளைஞர் பிரிவின் தேர்தல் கேந்திர தொடக்க விழாவில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.

இதே கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றாலும் அந்த வெள்ளத்தையும் கடந்து பிரச்சாரம் செய்து வெற்றி பெறும் ஆற்றல் தேசிய முன்னணிக்கு உண்டு எனக் கூறினார்.