Home நாடு பாடாங் செராய் இடைத் தேர்தல் : முகமட் சோஃபி பக்காத்தான் வேட்பாளர்

பாடாங் செராய் இடைத் தேர்தல் : முகமட் சோஃபி பக்காத்தான் வேட்பாளர்

426
0
SHARE
Ad

புத்ராஜெயா : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் முகமட் சோஃபி ரசாக் (Mohamad Sofee Razak) வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி காலமானார்.

அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்பாளர் ஒருவர் மரணமடைந்த காரணத்தால், பாடாங் செராய் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்.

#TamilSchoolmychoice

வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறும். இதன் காரணமாக அந்தக் தொகுதிக்கான தேர்தல் மீண்டும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, வாக்களிப்பு என நடைபெறும். பிரச்சாரங்களுக்கு 13 நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

முன்கூட்டிய வாக்குப் பதிவு டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்.

தேசிய முன்னணி சார்பில் பாடாங் செராய் தொகுதியில் மீண்டும் மஇகா சார்பில் டத்தோ சிவராஜ் சந்திரன் இங்கு வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பையாவுக்குப் பதிலாக புதிய வேட்பாளராக மலாய் வேட்பாளரை பக்காத்தான் அறிவித்திருக்கிறது. மலாய் வாக்காளர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் காரணத்தால் வியூகத்தை மாற்றி பக்காத்தான் மலாய் வேட்பாளரை அறிவித்திருக்கிறது.

முன்னாள் இராணுவ வீரரான கருப்பையா 2018 பொதுத் தேர்தலில் 8,813 வாக்குகள் பெரும்பான்மையில் பாடாங் செராய் தொகுதியில் வெற்றி பெற்றார். தேசிய முன்னணி வேட்பாளர் மசீசவின் டத்தோ லியோங் யோங் கோங், பாஸ் வேட்பாளர் முகமட் சோப்ரி ஓஸ்மான் ஆகியோரை அவர் தோற்கடித்தார்.

இந்த முறை பாடாங் செராய் தொகுதி 133,867 பதிவு பெற்ற வாக்குகளைக் கொண்டிருக்கிறது.

ஒரு வழக்கறிஞரான முகமட் சோஃபி ரசாக் ஒரு வழக்கறிஞராவார். கெடா மாநில பிகேஆர் கட்சிக்கும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் அவர் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.