Home உலகம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்களில் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு-ஹாமாஸ் தலைவர் அய்மான் யூனிஸ் சுட்டுக் கொலை

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்களில் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு-ஹாமாஸ் தலைவர் அய்மான் யூனிஸ் சுட்டுக் கொலை

453
0
SHARE
Ad

டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தாக்குதல்கள் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இருதரப்புகளையும் சேர்ந்த 900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேலின் தென்பகுதியில் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹாமாசுக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. ஹாமான் தீவிரவாதிகள் திடீரென நேற்று இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தினர். ஏவுகணைகளைப் பாய்ச்சினர்.

வடக்கு இஸ்ரேலில் லெபனானின் இஸ்லாமியப் போராளிகள் குழுவான ஹெஸ்புல்லா தாக்குதல்களை நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

இதுவரையில் இரு தரப்பிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 913-ஐ தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்ட ஹாமாஸ் இயக்கத்தினர் திடீரென ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர்.

ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான பொது கிளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இருந்து சுமார் 2,200 ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் குறுகிய காலத்திற்குள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் படைகளைத் திரட்டி காஸாவைத் தாக்கியது.

இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ தற்போது இருதரப்புகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவப் பெண்மணி ஒருவர் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதற்கிடையில் ஹாமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரா அய்மான் யூனிஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.