Home நாடு இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

139
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி ‘ஷாலோம் அவிதான்’ இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு நிருபர்கள் நீதிமன்ற வளாகத்தில் அதிகாலை முதல் பெருமளவில் குழுமியிருக்கின்றனர்.

6 துப்பாக்கிகள், 200 துப்பாக்கிக் குண்டுகளுடன் அந்த இஸ்ரேலிய உளவாளி தங்கும் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவர் பிரான்ஸ் நாட்டின் அதிகாரத்துவ அனைத்துலகக் கடப்பிதழை வைத்திருந்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு கவசத்துடன் கூடிய காவல் துறை வாகனத்தில், மேலும் 6 காவல் துறை வாகனங்கள் புடைசூழ  இஸ்ரேலிய உளவாளி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

#TamilSchoolmychoice

கறுப்பு நிற டி-சட்டை, கறுப்பு முகக் கவசத்துடன் அவிதான் இன்று காலை 8.11 மணியளவில் நீதிமன்றத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.