Home இந்தியா 15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

578
0
SHARE
Ad

சென்னை, செப். 4– அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

annaduraiபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 105–வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2013 முதல் 17.9.2013 வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.

jeya_1039813gதலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகா ராஷ்டிரா, கேரளா, புது டெல்லி மற்றும் அந்த மான் உள்ளிட்ட பிற மாநி லங்களிலும், 15.9.2013 அன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலை அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.