Home உலகம் இந்தியாவில் இரு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை – பான் கி மூன் அதிர்ச்சி!

இந்தியாவில் இரு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை – பான் கி மூன் அதிர்ச்சி!

474
0
SHARE
Ad

Ban-Ki-moonஜெனீவா, ஜூன் 5 – இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

“கடந்த இரண்டு வாரங்களாக உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழிவான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நைஜீரியா, பாகிஸ்தான், கலிபோர்னியா மற்றும் இந்தியாவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

இந்தியாவில் இரு மைனர் பெண்கள் இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பொழுது அவர்கள் கற்பழிக்கப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.”

“பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பினை கேள்விக் குறியாக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இருந்தாலும் துரதிருஷ்டமாக உலகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறன. சகதித்துக்கொள்ளவே முடியாத இந்த சம்பவங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.