Home நாடு பந்திங் படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு! மற்றவர்களைத் தேடும் பணி தீவிரம்! (புகைப்படங்களுடன்)

பந்திங் படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு! மற்றவர்களைத் தேடும் பணி தீவிரம்! (புகைப்படங்களுடன்)

495
0
SHARE
Ad

பந்திங், ஜூன் 18 – சுங்கை ஆயர் ஈத்தாமில் இன்று காலை நடந்த படகு விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் உடலை மீட்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்நிய நாட்டவர்கள் 97 பேர் பயணம் செய்த அந்த படகு பலத்த சூறாவளிக் காற்று தாக்கியதில் கவிழ்ந்ததாக நம்பப்படுகின்றது. நீரில் மூழ்கியவர்களில் இதுவரை 61 பேர் உயிருடன் மீட்கப்படுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இந்தோனேசியர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

Malaysian rescuers save 24 more passengers from capsized boat

Malaysian rescuers save 24 more passengers from capsized boat

Malaysian rescuers save 24 more passengers from capsized boat

படங்கள்: EPA