Home நாடு அருட்செல்வன் காவல் துறை தடுப்புக் காவலில் இருந்து விடுதலை

அருட்செல்வன் காவல் துறை தடுப்புக் காவலில் இருந்து விடுதலை

542
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 21 – எதிர்பார்த்தபடி மலேசிய சோஷலிஸ்ட் கட்சித் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் நேற்று காவல் துறை ஜாமீனோடு மாலை மணி 5.40 அளவில் விடுதலை செய்யப்பட்டார்.

வியாழக்கிழமை இரவு அவர் காவல் துறையால் தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டார்.

Arutchelvan released

#TamilSchoolmychoice

நேற்று அவரை மேலும் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கும் விண்ணப்பத்தை காவல் துறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன் வைத்தபோது, நீதிமன்றம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.