Home உலகம் ஏமனில் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!

ஏமனில் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!

402
0
SHARE
Ad

Yemen_2353468fதுபாய், ஏப்ரல் 22 – ஏமனில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த சவுதி அரேபிய அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக தொலைக்காட்சியில் அறிவித்தது.

உள்நாட்டு போர் காரணமாக, கடந்த மார்ச் 19-முதல் அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா ரணுவம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வந்தது.

unnamed-242இதுவரை நடைபெற்று வந்த ‘தீர்வுக்கான புயல்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகள் முடிவு பெறுவதாகவும், தற்போது ‘நம்பிக்கையை மீட்டெடுப்பது’ என்ற புதிய நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏமன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.