Home நாடு பழனிவேல் – சங்கப் பதிவக வழக்கு மேல்முறையீடு: மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

பழனிவேல் – சங்கப் பதிவக வழக்கு மேல்முறையீடு: மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

609
0
SHARE
Ad

புத்ரா ஜெயா, ஜூலை 13 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) செய்துள்ள மேல்முறையீட்டின் விசாரணை இன்று நடைபெறுகின்றது.

DATUK SERI GOPAL SRI RAMசங்கப் பதிவகத்தின் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக அமர்ஜிட் சிங் செயல்படுகின்றார்.

பழனிவேல் தரப்பினரைப் பிரதிநிதித்து, முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் ரகுநாத் கேசவன் வழக்காடுகின்றார்.

#TamilSchoolmychoice

மூன்றாம் தரப்பாக இந்த வழக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள 2009 மத்திய செயலவையின் சார்பில் முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதி கோபால் ஸ்ரீராம் (படம்) இன்று வழக்காடுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலும் செய்திகள் தொடரும்)