Home Featured தொழில் நுட்பம் கொழும்பு “உத்தமம்” பயிலரங்கில் முத்து நெடுமாறன் உரை!

கொழும்பு “உத்தமம்” பயிலரங்கில் முத்து நெடுமாறன் உரை!

1220
0
SHARE
Ad

Muthu Nedumaran-feature- jpegகொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் எழுத்துரு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் (International Typography Day conference) கலந்து கொள்ள இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வந்தடையும் முத்து நெடுமாறன் அங்கு சில தொழில்நுட்பக் கருத்தரங்க நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்கின்றார்.

முத்து நெடுமாறன் செல்லினம் குறுஞ்செயலி மற்றும் முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் வடிவமைப்பாளரும், உருவாக்குநரும் ஆவார்.

செல்லியல் ஊடக குறுஞ்செயலியின் இணை தோற்றுநரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 26-ஆம் நாள் கொழும்புவில், உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு’ என்ற தலைப்பிலான பயிலரங்கில் கலந்து கொண்டு தனது கருத்துகளையும், சில செயல்முறை விளக்கங்களையும் வழங்குவார்.

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறன் உத்தமம் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர் என்பதோடு, அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது முதலாவது உதவித் தலைவராகப் பணியாற்றியவராவார்.

உத்தமம் அமைப்பின் தமிழ் தகவல் தொழில்நுட்பம் மீதான அனைத்துலக மாநாட்டின் தலைவராகவும் முத்து நெடுமாறன் பணியாற்றியிருக்கின்றார்.

MUTHU NEDUMARAN-COLOMBO-EVENTகொழும்புவில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலைய கருத்தரங்கு மண்டபம், வெள்ளவத்தை, தர்மராம மாவத்தை, என்ற இடத்தில் நடைபெறும் இந்தப் பயிலரங்கத்திற்கு இலங்கை உத்தமம் கிளையின் உறுப்பினர் இ.பாரதி தலைமை வகிப்பார்.