Home நாடு தஞ்சோங் பூங்காவில் நிலச்சரிவு: 20 பேர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது!

தஞ்சோங் பூங்காவில் நிலச்சரிவு: 20 பேர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது!

1200
0
SHARE
Ad

penang landslide 1ஜார்ஜ் டவுன் – தஞ்சோங் பூங்காவில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் புதையுண்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

லோரோங் லெம்பா பெர்மாய் 3-ல் நடந்த இச்சம்பவத்தில், இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கூறுகின்றது.

தற்போது நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு இலாகா தீவிரமாக இறங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice