Home கலை உலகம் 28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்!

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்!

1247
0
SHARE
Ad

SankarGanesh.சென்னை, ஜூன் 2 – பிரபல தமிழ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம பார்சலை பிரித்த போது திடீரென்று ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தால் இவரது கை மற்றும் வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டது.

SankarGaneshஇதனையடுத்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சையால் இழந்த கண்பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.

இது குறித்து பேசிய சங்கர் கணேஷ் கூறியதாவது,“எனது கண் பார்வை முன்னை விட தற்போது தெளிவாக உள்ளது.  எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. எனது கண்களை நான் கண் தானம் செய்துள்ளேன். அனைவரும் தங்களது கண்களை கண்தானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice