இது குறித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் வில்பிரட் மாடியுஸ் தாங்காவ் கூறுகையில், “கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பாரிசானை விட்டு விலகி வாரிசானுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
உப்கோவுடன் இணைந்து மொத்த 29 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது தேசிய முன்னணி.
இந்நிலையில், உப்கோ 5 தொகுதிகளுடன் வாரிசானில் இணைவதால், வாரிசான் அதிக பெரும்பான்மை பெற்று சபாவில் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.