கிளந்தானை த் தொடர்ந்து ஆறாவது தவணையாக கைப்பற்றுவதில் வெற்றிக்கொண்டுள்ள டத்தோ நிக் அசிஸ் நிக் மாட் (வயது 82), மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
மாநில வரலாற்றில் 22 ஆண்டுகளில் முதன் முறையாக , புதிய மந்திரி பெசாராக டத்தோ அகமட் யாகோப் நேற்று கிளந்தான் சுல்தான் முன்னிலையில் பதவி பரிமாணம் எடுத்துகொண்டார்.
மாநில பாஸ் செயற்குழுவினர் நேற்று முன்தினம் இரவு சந்தித்து இந்த முடிவை எடுத்ததாக டத்தோ நிக் உறுதிப்படுத்தினார்.
இஸ்தான குபாங் கிரியானில் நேற்று மாலை நடைபெற்ற சடங்கில் புதிய துணை மந்திரி பெசாரும், புதிய ஆட்சிக்குழுவினரும் பதவிப் பரிமாணம் எடுத்துக்கொண்டனர்.