19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட இந்த வைரம், டவர் ஆஃப் லண்டனில் அரச குடும்பத்து ஆபரணங்களின் ஒருபகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீளப்பெற்று வர வேண்டும் என்று கோரி சிவில் அமைப்பொன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்தது.
கோகினூர் வைரம், பஞ்சாபி மகாராஜா ரஞ்சித் சிங்கினால் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக இந்தியாவின் கலாசார அமைச்சு பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.