

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான தேசிய நிலையிலான கருத்தரங்கத்தைத் திறந்து வைத்த கல்வி துணையமைச்சர், டத்தோ ப.கமலநாதன், உணர்ச்சிகரமான, அதே சமயத்தில் தமிழ்ப் பள்ளிகள் குறித்த தனது உள்ளக் கிடக்கைகள் வெளிப்படுத்தும் வண்ணம் உரையொன்றை வழங்கினார்.
அவரது உரையில் பல முக்கியமாக தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அவர் தனது திறப்புரையின் போது ஆவணப் படங்களுடன் வெளியிட்டார். அதில் சில குறிப்பிடத்தக்க, தமிழ்ப் பள்ளிகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அதிகாரபூர்வத் தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
எஸ்டிபிஎம் தமிழ் எடுக்கும் மாணவர்கள்
எஸ்டிபிஎம் தேர்வுகளில் சீனமொழியை ஒரு பாடமாக எடுக்கும் சீன மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழை ஒரு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்கள் அதிக விகிதாச்சாரத்தில் இருக்கின்றனர் என்றும் கமலநாதன் தனதுரையில் குறிப்பிட்டார்.
எஸ்பிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 9730
எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக எடுப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருந்து வருகிறது. 2017-இல் 9,730 மாணவர்கள் தமிழ் மொழியை எஸ்பிஎம் தேர்வுகளில் ஒரு பாடமாகத் தேர்வு செய்தனர்.
தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் 3,139 ஆக இருந்தது.
தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளிகளில் கல்வி பயின்று வருபவர்கள் மொத்த எண்ணிக்கை 2017 புள்ளி விவரங்களின்படி 87,230 மாணவர்களாவர். நடப்பு 2018-ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சற்றே உயர்ந்து 87,520 ஆக இருந்து வருகிறது.
புதிய 7 பள்ளிகள் கட்டி முடிக்கப்படும்போது, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 பாலர் பள்ளிகளுக்கு 10 மில்லியன்
தமிழ்ப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு
இதில் புதிதாக 7 பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டு, 523-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 530-ஆக உயர்வு கண்டுள்ளது. 21 பள்ளிகள் இடமாற்றம் கண்டுள்ளன. 18 புதிய இணைக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறையிலும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 15 தமிழ்ப் பள்ளிகளுக்கு விளையாட்டு வசதிகளை மேம்படுத்த 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு
7 புதிய பள்ளிகள் எங்கு? எவ்வளவு செலவு?
புதிதாக அமையவிருக்கும் 7 தமிழ்ப் பள்ளிகள் எங்கு அமைக்கப்படவிருக்கின்றன – அவற்றுக்கான மொத்த கட்டுமான செலவினங்கள் எவ்வளவு என்பதை மேலே உள்ள வரைபடம் காட்டுகிறது.
இந்த 7 புதிய தமிழ்ப் பள்ளிகளின் நிர்மாணிப்பிற்கும் மொத்தம் 130.75 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2012-இல் 523 ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2018-ஆம் ஆண்டு நிறைவடையும்போது 530 ஆக உயர்வு கண்டிருக்கும். இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கும்.
-செல்லியல் தொகுப்பு