இந்தப் பல்கலைக் கழகத்தில் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு வட்டாரங்களின் மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டுக் கூறுகள் மீதிலான கல்வி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்தப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வி கற்பிக்கப்படும், மற்றும் தமிழ் மொழி மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வகையில் இங்கு தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
“நம் தாய் தமிழின் சுவையை அறிந்திட்ட நாம், அதன் பெருஞ்சுவையை தமிழின சந்ததியரும், பிற மொழி ஆர்வலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக (மீண்டும்) தமிழ் கல்வி வசதிகள் உருவாக்கிடப் இலண்டன் பல்கலைகழகத்தின் நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கான அனுமதிக் கடிதத்தை, 18 சூலை 2018 அன்று இலண்டன் தமிழ் ஆர்வலர்களுக்கு வழங்கினர்” என இதன் தொடர்பில் செயலாற்றி வரும் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தற்போது பிரிட்டனில் வசிக்கும் பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் SOAS-இல் தமிழ் படிப்பதற்கும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் புதிய கட்டமைப்புகள் தொடங்குவதற்கான சூழல் மலர்ந்துள்ளது. உலக அரங்கில் சிறந்து விழங்கும் தமிழ் ஆய்வாளர்களான பேராசிரியர் ஜோன் மார் (Prof. John Marr), ஸ்டுவார்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn), மற்றும் டேவிட் ஷூல்மன் (David Shulman) ஆகியோர்களை உருவாக்கியப் பெருமை இலண்டன் பல்கலைக்கழகத்தையே சாரும்.
தமிழில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்த, நான்கு மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு தமிழ் மொழியின் பெருமைகளை பல்வேறு நாட்டவரும் படித்து செல்ல ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி வசதிகள் அமைப்பதற்கான அங்கீகாரத்தை அறிவிப்பதற்காகவும், அதற்கான நிதியை திரட்டுவதை ஆரம்பித்து வைப்பதற்கான தொடக்க விழாவினை, பல்கலைக்கழக உறுப்பினர்களும், யுனைடெட் கிங்டம் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து அக்டோபர் 14-ஆம் தேதி SOAS வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு, அதன் பின்னர் அவ்வளாகத்தில் உள்ள புருணை விரிவுரை அரங்கத்தில் (Brunei Gallery Lecture Theatre -BGLT) நடத்தினார்கள்.
“உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் ஆசியும், உன்னதமான ஆதரவும் இணைந்து, இம்முயற்சி வெற்றிகரமாக நிறைவேறிட துணைநிற்க அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் இதற்காகப் பாடுபட்டு வரும் குழுவினர் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலதிகத் தகவல்களுக்கு: