Home Uncategorized சபா தேர்தல்: மாநில முதல்வர் பதவிக்கு அம்னோவிலிருந்து பலர் தகுதிப்பெறலாம்!

சபா தேர்தல்: மாநில முதல்வர் பதவிக்கு அம்னோவிலிருந்து பலர் தகுதிப்பெறலாம்!

458
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அடுத்த சபா மாநிலத் தேர்தலில் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால், மாநில முதல்வராக நியமிக்க தாம் உட்பட சபா அம்னோவிலிருந்து பல தகுதியானத் தலைவர்கள் இருப்பதாக சபா அம்னோ தொடர்புக் குழுவின் தலைவர் புங் மொக்தார் ராடின் சுட்டிக்காட்டினார்.

“சபா அம்னோவுக்கு பல முதலமைச்சர் வேட்பாளர்கள் உள்ளனர். என்னால் முடியும். எனது துணைத் தலைவரும் (ஜெப்ரி ஆரிபின், கினாபாதாங்கான் அம்னோ பிரிவு துணைத் தலைவர்), டத்தோ ரஹ்மான் (அப்துல் ரஹ்மான் தஹ்லான்) மற்றும் டத்தோ ஹஸ்னோல் (முகமட் ஹஸ்னோல் அயூப், பெனாம்பாங் அம்னோ பிரிவுத் தலைவர்) ஆகியோரால் முடியும்.” என்று அவர் கூறினார்.

இந்த நேரத்தில் சபா தேர்தலில், அம்னோ முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, ​​”பலர் இருக்கிறார்கள், 10 பேரை முதல்வராக்க முடியும் என்றால், அனைவராலும் முடியும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தாம் இந்த முறை சபா தேர்தலில் பங்கேற்க இருப்பதாகவும், புதிய சட்டமன்றமான லமாக்கில் போட்டியிட உள்ளதாகவும் புங் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

தவிர, ஜெப்ரி ஆரிபின் சுகாவ் சட்டமன்றத்தில் போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்தார்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட சபா அம்னோ உட்பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் தற்போது புங் மொக்தார் தலைமையிலான சபா அம்னோ தொடர்பு அமைப்புடன் ஒத்து வரவில்லை என்று ஊகங்கள் கூறுகின்றன.

அம்னோவும் அதன் கூட்டணிகளும் வாரிசானை தோற்கடிக்க முடிந்தால், சபா முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகளால் இந்த பிரச்சனை தூண்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாரிசான் – நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அகற்ற மூசா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சபாவில் தேர்தல் நடைபெறுகிறது.

நேற்று, புங் மொக்தார் சபா அம்னோ கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். போட்டியிடும் தொகுதிகளை விநியோகித்தல், வேட்பாளர்களை அடையாளம் காணுதல், அனைத்து இயந்திரங்களையும் ஒழுங்கமைத்தல் மற்றும் வாக்காளர்களை அடையாளம் காண்பது போன்ற விவகாரங்கள் பேசப்பட்டன.

“சபா அம்னோ, தேசிய கூட்டணி மற்றும் எங்கள் பிற கூட்டணிகள் வாரிசானுக்கு எதிராக 73 சட்டமன்றங்களில் போட்டியிடுவார்கள் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

“சபா அம்னோ, தேசிய கூட்டணி இடையே ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தும். பின்னர் நாங்கள் வாரிசானுடன் ஆதரவாக இல்லாத எங்கள் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்,” என்று அவர் கூறினார்.