Home One Line P1 19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

450
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14 முதல் 16 செப்டம்பர் வரை அனைத்து 73 சபா மாநில சட்டமன்ற தொகுதிகளிலும் சபா மாநில தேர்தலுக்கான 19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையச் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் கூறுகையில், மொத்தம் 17,288 பேர் தேர்தல் ஊழியர்களின் வாக்குகள், வெளிநாட்டில் உள்ள வாக்களிக்க இயலாதவர்கள் 50 பேர், வெளிநாடுகளில் மலேசியர்களுக்கு 78 அஞ்சல் வாக்குகள் மற்றும் சுகாதார, பாதுகாப்பு பணியாளர்களுக்கு 1,594 வாக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

“அனைத்து கட்சிகளிலிருந்தும் அல்லது போட்டியிடும் தனிநபர்களிடமிருந்தும் வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை வெளியிடுவதற்கான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது

#TamilSchoolmychoice

“தபால் வாக்குச் சீட்டை வெளியிடுவதற்கான செயல்முறைக்கு சாட்சியாக நியமிக்கப்பட்ட பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் அழைத்தது” என்று இக்மால்ருடின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயல்முறை குறித்த பொதுமக்களின் புரிதலை அதிகரிக்கும் நோக்கத்திற்காக 16- வது சபா மாநிலத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகளை வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என்று இக்மால்ருடின் கூறினார்.

இதற்கிடையில், செப்டம்பர் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் மாலை 5 மணிக்கு முன்னதாக அனைத்து தபால் வாக்காளர்களும் தங்களது வாக்குச் சீட்டுகளை உடனடியாக தொகுதி நிர்வாக அதிகாரியிடம் திருப்பித் தருமாறு இக்மால்ருடின் நினைவுபடுத்தினார்.

அஞ்சல் வாக்குச் சீட்டுகளின் படங்களை எடுத்து, சமூக ஊடகங்களில் பகிராமல், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளின் இரகசியத்தன்மையை எப்போதும் பராமரிக்க நினைவூட்டப்படுகிறார்கள்.