Home One Line P1 எஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்

எஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்

791
0
SHARE
Ad

சென்னை :மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ் நாடு காவல் துறை மரியாதையோடு, 72 மரியாதை குண்டுகள் முழங்க நல்லடக்கச் சடங்குகள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும் அவரது ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவருமான இளையராஜா திருவண்ணாமலை ஆலயத்திற்கு வருகை தந்து எஸ்பிபிக்காக மோட்ச தீபம் ஏற்றி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினார்.

ஏற்கனவே காணொலி வழி கண்ணீர் மல்க பாலாவுக்கு தனது அஞ்சலியை இளையராஜா செலுத்தினார்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி ஒரே நாளில் எஸ்பி பாலாவுக்கென அஞ்சலிப் பாடல் ஒன்றையும் எழுதி இசையமைத்து ஊடகங்களின் வழி வெளியிட்டார்.