Home One Line P1 3 விவகாரங்களில் முவாபாக்காட், அம்னோ உச்சமன்றக் கூட்டம் கவனம் செலுத்த வேண்டும்

3 விவகாரங்களில் முவாபாக்காட், அம்னோ உச்சமன்றக் கூட்டம் கவனம் செலுத்த வேண்டும்

387
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த வாரம் அம்னோ உச்சமன்றம் மற்றும் முவாபாக்காட் நேஷனல் கூட்டங்கள் மக்களின் நலனுக்காக மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா நம்புகிறார்.

கொவிட் -19 பாதிப்பு, பொருளாதார சிக்கல்கள் மற்றும் 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் விவகரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முவாபாக்காட் நேஷனல் மற்றும் உச்சமன்றக் கூட்டங்கள் பின்வருவனவற்றில் கவனம் செலுத்த முடிந்தால் அது நன்மை பயக்கும்.

#TamilSchoolmychoice

“ஒன்று, கொவிட் -19 உடன் போராடுவதற்கு சமூக வலுவூட்டலை அணிதிரட்ட 22,000 அம்னோ கிளைகளை எவ்வாறு திரட்ட முடியும்.

“இரண்டாவது பிரச்சனை, பொருளாதாரத்தின் முக்கியமான பிரச்சனை, குறிப்பாக மக்களின் நலனை பாதிக்கும் மற்றும் மூன்றாவது, 15-வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள்” என்று அவர் இன்று டுவிட்டரில் தெரிவித்தார்.

முவாபாக்காட் கூட்டம் இன்று இரவு தலைநகரில் நடைபெற உள்ளது. இதில் பாஸ் மற்றும் அம்னோ ஆகிய இரு கட்சி துணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெறும்.

அம்னோ உச்சமன்றக் கூட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பகாங்கில் நடைபெறும், ஆனால் அதன் இடம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

நாளை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஒரு பெரிய அறிவிப்பு இருக்கும் என்று பல தரப்புகள் தெரிவிக்கின்றன. அம்னோ அரசியல் பிரிவு தேசிய கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.

பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக அன்வார் இப்ராகிமை ஆதரித்ததாகவும், அந்த முடிவை மதிக்கிறார்கள் என்றும் அதைத் தடுக்க முடியவில்லை என்றும் அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி முன்பு கூறியிருந்தார்.